வாழ்க்கை எனும் அமுதத்துளி

எனக்குப்பிடித்த இன்னொரு பாட்டு. லோகி எழுதிய செங்கோல் படத்தின் பாடல் இது. விதி வசத்தால் கேடியாக ஆகி சிறைசென்று வாழ்க்கை தடம்புரண்டு, அனைத்தையும் இழந்து, சொந்த சகோதரியை வேசியாகவும் தந்தையை கூட்டிக்கொடுப்பாளனாகவும் பார்க்க நேர்ந்து மனம் உடைந்து மேலே வாழ எண்ணமே இல்லாமல் சேதுமாதவன் [மோகன்லால்] தெருவுக்கு வருகிறான். நள்ளிரவில் தெருவிலே வாழும் ஒரு பிச்சைக்காரக்குடும்பம் இந்தப்பாட்டை பாடுகிறது.

லோகி மது அருந்தினால் விரும்பிப்பாடும் பாடல்களில் ஒன்று இது. பெரும்பாலும் அழுதுவிடுவார். இன்று இவ்வரிகளுடன் அவரது கண்ணீர் வழியும் முகமும் கலந்துவிட்டிக்கிறது. இதன் பல வரிகள் லோகியும்சேர்ந்து உருவாக்கியவை. மகத்தான விஷயங்கள் முன் கண்ணீருடன் நின்ற கலைஞனை இப்போது எண்ணிக்கொள்கிறேன்

படம் செங்கோல்
இசை ஜான்சன்
பாடல் கைதப்றம் தாமோதரன் நம்பூதிரி
பாடியது ஏசுதாஸ்

மதுரம் ஜீவாம்ருத பிந்து!
ஹ்ருதயம் பாடும் லயசிந்து!
மதுரம் ஜீவாம்ருத பிந்து

மதுரம் ஜீவாம்ருத பிந்து

சௌகந்திகங்ஙளே உணரூ வீண்டும் என்
மூகமாம் ராத்ரியில் பார்வணம் பெய்யுமீ
ஏகாந்த யாம வீதியில்!

தாந்தமாணெங்கிலும்..
தாந்தமாணெங்கிலும் பாதிராக்காற்றிலும்
வாடாதே நில்குமென் தீபகம்!
பாடுமீ ஸ்னேகரூபகம் போலே

[மதுரம் ஜீவாம்ருத பிந்து]

சேதோ விகாரமே நிறயூ வீண்டுமென்
லோலமாம் சந்தியயில் ஆதிரா தென்னலின்
நீஹார பிந்து சூடுவான்!

தாந்தமாணெங்கிலும்
தாந்தமாணெங்கிலும் ஸ்வப்னவேகங்களில்
வீழாதே நில்குமென் சேதன
நின் விரல் பூ தொடும்போள் என் நெஞ்சில்!

[மதுரம் ஜீவாம்ருத பிந்து!]

*

இனியது வாழ்க்கைஎனும் அமுதத்துளி
இதயம் பாடும் தாளத்தின் சிந்து

நறுமண மலர்களே விழியுங்கள் மீண்டும்
என் ஊமை இரவுகளில் பௌர்ணமி பெய்யும்
இந்த ஏகாந்த யாம வீதியில்!

கலங்கியதென்றாலும்,
ஆம் கலங்கியதென்றாலும்,
நள்ளிரவுக்காற்றிலும்
வாடாமல் நிற்கின்றது என் தீபம்!
நான் பாடும் இந்த அன்பின் உருவகத்தைப்போல.

இனிய உணர்வுகளே நிறையுங்கள் மீண்டும் என்
மெல்லிய அந்தியின் ஆதிராநாளின் தென்றலின்
மென்பனித்துளியை சூடுவதற்காக!

கலங்கியதென்றாலும்,
ஆம் கலங்கியதென்றாலும்
கனவு வேகங்களில்
வீழாமல் நிற்கின்றது என் பிரக்ஞை,
உன் விரல் பூ தீண்டும்போது என் நெஞ்சில்!

கலங்கும் தனிய கணங்களில் வாழ்க்கையின் சாராம்சமாகவே நம்முடன் வரும் பாடல் என்று எனக்கு படுவதுண்டு இது.

 

 

 

மறுபிரசுரம்/முதற்பிரசுரம் ஆகஸ்ட் 23, 2010

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-28
அடுத்த கட்டுரைவிடுதலைச் சிறுத்தைகள், திருமாவளவன் – விளக்கம்